திமுகவினருக்குக் கடனா? அமைச்சர் மறுக்கிறார்
திருச்சி:
தமிழக அரசு திமுக தொண்டர்களுக்கு கடன் வசதி அளிப்பதற்காக ரூ 120 கோடியை தனியாக ஒதுக்கி வைத்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு தவறானது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் தாவ்குடியில் பள்ளிக்கூட கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் ஆகியவைகளைத் திறந்து வைத்து அவர்பேசியதாவது:
திமுக அரசு அறிமுகப்படுத்தும் பல திட்டங்கள் பொது மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான மைக்ரோ கிரெடிட் திட்டம்மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.5 லட்சம் பெண்களுக்கு ரூ 21 கோடி வரை கடன்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புறமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் கிராமப்புற பெண்களுக்காக பல கடன் வசதித் திட்டங்கள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார் நேரு.
முன்னதாக, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலிருந்து வாங்கிய கடனை உடனடியாகத் திருப்பிச் செலுத்தும்படிக் கூறும் தமிழக அரசு, திமுக தொண்டர்களுக்குகடன் அளிப்பதற்காக ரூ 120 கோடியை எடுத்துத் தனியாக வைத்திருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications