112 ஆண்டுக்குப் பின் வந்து சேர்ந்த தபால்
எடின்பர்க் (ஆஸ்திரேலியா):
ஆஸ்திரேலியாவில் உள்ள அபர்டீன் வசித்த ஒருவருக்கு 112 வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்ட கடிதத்தை தபால்துறை சமீபத்தில் பட்டுவாடா செய்தது.
1889 ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ம் தேதி கோலின் என்ற பகுதியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் அபர்டீன நகர தபால் நிலையத்துக்கு சில நாட்களுக்கு முன்புவந்து சேர்ந்தது.
இதுகுறித்து அபர்டீன் தபால் அதிகாரி, பீட் ஸ்மித் கூறுகையில், 112 வருடங்களுக்குப் பிறகு அபர்டீன் தபால் நிலையத்துக்கு வந்த கடிதம் குறித்து எங்களுக்குஎதுவுமே புரியவில்லை. இத்தனை நாட்கள் இது எங்கு இருந்தது என்றே தெரியவில்லை என்றார்.
இந்த தபாலில் மிகவும் தாமதமாக வந்ததற்கான அடையாள முத்திரையும் எதுவும் இல்லை.
இதற்கிடையே கின்னஸ் சாதனைப் புத்தக செய்தித் தொடர்பாளர், தாமதமான இந்த தபால் கார்டை வைத்திருப்பவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்என்று அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 2 அல்லது மூன்று வருடங்கள் தாமதமான கடிதங்கள் குறித்து கின்னஸ் புத்தகத்தில் போட்டுள்ளோம். ஆனால் 112 வருடம்என்பது எங்களை ஆச்சரியப்படுத்துகிறது என்றார்.
இந்த நிலையில், 32 கார்டன் பாலஸ், அபர்டீன் என்ற முகவரிக்கு 112 வருடங்களுக்குப் பிறகு வந்த தபாலை கொடுப்பதற்காக வந்த தபால் ஊழியர் அந்தஇடத்தில் பல் மருத்துவமனை இருப்பதை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது.












Click it and Unblock the Notifications