அமில வீச்சு: கெளடா மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹார்டனஹள்ளியில் ஆசிட் வீசித் தாக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மனைவி சென்னம்மாவுக்குபிளாஸ்டிக் சர்ஜரி நடந்தது.
பாதிக்கப்பட்ட அவரது கை தோல் நீக்கப்பட்டது.
இதுகுறித்து மல்லய்யா மருத்துவமனை செய்திகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆசிட் வீசித் தாக்கப்பட்ட சென்னம்மா அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாயகட்டத்தை கடந்து விட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவில் மல்லய்யா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் உதய் சங்கர், ஆனந்த் மற்றும் மும்பையைச்சேர்ந்த டாக்டர் ராம் ஆகியோர் உள்ளனர்.
ஆசிட் வீசித் தாக்கப்பட்ட சென்னம்மாவுக்கு 30 சதவீதம் காயம் ஏற்பட்டது. இவரது மருமகள் பவானி மற்றும் பாதுகாவலர் ஆகியோருக்குலேசான காயம் ஏற்பட்டது.
சிவாராத்திரி தினத்தன்று தேவெ கெளடாவின் மனைவி சென்னம்மா, மருமகள் பவானி மற்றும் கெளடா ஆகியோர் தங்களது சொந்த ஊரில் உள்ள ஈஸ்வர்கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கெளடாவின் மூத்த அண்ணன் பசவ கெளடாவின் மகன் ஆசிட் வீசித் தாக்கினார்.
யு.என்.ஐ.