குஜராத் பூகம்பம்: மெழுகுவர்த்தி பேரணியில் கனடா பிரதமர்
டொரான்டோ:
குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கனடாதலைநகர் ஒட்டாவாவில் நடந்த மெழுகு வர்த்திப் பேரணியில் அந்நாட்டுப் பிரதமர் ஜீன் செர்டியன் கலந்துகொண்டார்.
இந்தியாவின் பேரணியில் அவர் கலந்து கொண்டபின் அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது உறவினர்கள், சேதமடைந்த பொருட்கள்,தொழிற்சாலைகள் ஆகியவை குறித்து தெரிந்து கொண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பூகம்பத்தால் தங்கள்உறவினர்களையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால நலனிற்காக நடந்த மெழுகு வர்த்தி பேரணியில் கலந்து கொண்டேன்.மெழுகுவர்த்திப் பேரணியின் முக்கிய நோக்கமே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனைசெய்வதேயாகும்.
எனது சார்பிலும், கனடா மக்கள் சார்பிலும் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்தஅனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications