For Daily Alerts
Just In
1,2,5 ரூபாய் நோட்டுக்களுக்குக் குட்பை
டெல்லி:
ஒன்று, இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை முழுவதுமாக நிறுத்தி விட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்க பதில் ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நாணயங்களை மட்டுமே அரசு வெளியிடும் என மத்திய நிதித்துறைஇணை அமைச்சர் பாலாசாஹிப் விகே படேல் லோக்சபாவில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில், இனிமேல் ஒன்று, இரண்டு மற்றும் ஐந்து ரூபாய்நோட்டுக்கள் அச்சிடப்பட மாட்டாது.
அதே போல் நாணயங்களை நவீன முறையில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். நாணயங்களைவெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்திய ரூபாய் நோட்டுக்கள் நீண்ட காலம் உழைக்கும் வகையில் தரத்தை உயர்த்தவும் மத்திய அரசு ஆலோசித்துவருகிறது என்றார் பாலாசாஹிப்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, February 23, 2001, 5:30 [IST]