3 வது அணி அமைய ஐக்கிய கம்யூனிஸ்ட் அழைப்பு
சென்னை:
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளைத் தோற்கடிக்கும் விதத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து மூன்றாவதுஅணி அமைக்க வேண்டும் என்று ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மோஹித் சென் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் திமுக கூட்டணியை தோற்கடித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிமுக வுக்கு இருந்தது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்த பாமக,அதிமுக வுடன் இணைந்து விட்டதால் அதிமுக வுக்கு இருந்த செல்வாக்கு குறைந்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில் பாமக விடுதலைப்புலிகள்ஆதரவுக் கட்சியாகும்.
கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவில் பாமக இணைந்துள்ளதை வரவேற்றுள்ளன. அவர்கள் தங்களுக்கு அதிகதொகுதிகள் கிடைக்கலாம் என்று தப்புக்கணக்குப் போட்டு விட்டார்கள். அதனால் தான் பாமக வரவை வரவேற்றுள்ளார்கள் அவர்கள்.
பாஜக உள்ள திமுக விலோ அல்லது பாமக உள்ள அதிமுக விலோ சேராமல் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்க காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியும் முயல வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications