குறைந்த விலை விமான தயாரிப்பில் முன்னணியில் இந்தியா
கோவை:
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இந்தியா மட்டுமே விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் தயாரித்துவருகிறது என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் தலைவர் பத்மஸ்ரீ கே. கிருஷ்ணதாஸ் தெரிவித்தார்.
கோவை அம்ரிதா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த "பிரகதி 2001 என்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்துகிருஷ்ணதாஸ் பேசியதாவது:
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (எச்.ஏ.எல்), சரஸ் என்ற புதிய ரக விமானங்களைத் தயாரிக்கவுள்ளது.இந்த விமானங்கள் மிகவும் இலகு ரக விமானங்களாகும். இதே போன்று 6 முதல் 7 அமர்ந்து செல்லும் விமானம்,17 பேர் பயணம் செய்யும் விமானம், 30 முதல் 50 பேர் வரை பயணம் செய்யும் விமானம், நூறு பேர் பயணம்அமரும் அளவில் சிறிய விமானம் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரிக்க உள்ளது.
அவசர காலப் பணிக்காக கடற்படை மற்றும் ராணுவப் பிரிவுகளுக்கு சிறிய ரக ஹெலிகாப்டர்களை இந்துஸ்தான்ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளது. இத்தகைய விமானங்கள், மற்றும் ஹெலிகாப்டர்கள்உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டவை.
ஓட்டுநர்களுக்காக புதிய பயிற்சி விமானங்களையும் உருவாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவை தவிர,செயற்கைக் கோள், லான்ச்சர்கள் ஆகியவையும் உருவாக்கப்படும். இந்திய ராணுவத்திற்காக 37 ஜகுவார்விமானங்கள், 3 சுகோய் விமானங்கள் ஆகிவற்றைத் தயாரிக்க ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.