ராஜிவ் கொலை: இலங்கை நபர் நாடு திரும்ப அனுமதி
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிவ ரூபன் என்பவர் இலங்கை திரும்ப சென்னைஉயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் சிவரூபன் தாக்கல் செய்த மனுவில், இலங்கை செல்ல அனுமதி கோரி தமிழக அரசிற்கு கடிதம் எழுதி ஓராண்டுக்கும் மேலாகியும்நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
சென்னையில் இலங்கை துணை தூதரகத்தை பாஸ்போர்ட் விஷயமாக தொடர்பு கொள்ளுமாறு தமிழக அரசு ஏற்கனவே மனுதாரருக்குஅறிவுறுத்திவிட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
முன்னதாக, 89ல் காயங்களுடன் இலங்கையிலிருந்து தப்பி வந்த சிவரூபனிடம் பாஸ்போர்ட் போன்ற எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் ராஜீவ்கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தடா நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டது.
பின்னர் உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட அவர் வேலூர் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications