மூன்றாவது அணி தான் ஒரே வழி: த.மா.க. முடிவு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்புஅதிகமாக உள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.எஸ். அழகிரிதெரிவித்துள்ளார்,
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க காங்கிரஸ் இடையே நடந்த பேசசு வார்த்தை குறித்து முழுமையானவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றமில்லை.அது முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன்.
இப்போதுள்ள அரசியில் சூழ்நிலையில் த.மா.கா. தலைமையில் மூன்றாவது அணி வரவாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மூப்பனார் காங்கிரஸ். அ.தி.மு.க. பேச்சு வார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால்நிலவி வரும் அரசியல் நிலை குறித்து கட்சி தலைவர்களுடன் விவாசித்தார் என்றார்
அ.தி.மு.க.வின் ஆலோசகராகவும், பா.ஜ.க.வின் ஆதரவாளராகவும் இருக்கும்பத்திரிக்கையாளர் சோ மூப்பனாரை சந்தித்து மதசார்பற்ற கூட்டணியில் தொடருமாககேட்டுக் கொண்டார் ஆனால் அதற்கு முப்பனார் எந்த பதிலும் கூறவில்லை.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மூப்பனார் ஜெயலலிதாவுக்கு நேரிலோஅல்லது தொலைபேசி மூலமோ வாழத்து தெரிவிப்பார் என கட்சி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. ஆனாலும் இதற்கு எந்த விதமான அரசியல் முக்கியத்துவமும்கிடையாது. இது மரியாதை நிமித்தமானதுதான் என்றும் அவர்கள் கூறினர்.
யு.என்.ஐ.