For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 ஆண்டில் எல்லா கிராமங்களுக்கும் டெலிபோன்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த இரண்டாண்டுக்குள் தொலைபேசி வசதி அளிக்கப்படும் என மத்திய தகவல் தொடர்புத்துறைஅமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்கள் கூட்டத்தில் பேசிய பாஸ்வான், நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 4 லட்சம் கிராமங்களில் தொலைபேசி இணைப்பு வசதிஅளிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் எல்லா கிராமங்களுக்கும் தொலைபேசி இணைப்பு வசதி உள்ளது.

தற்போது 100 பேருக்கு 3 பேர் இணைப்பு வைத்துள்ளனர். இந்த அளவு 2010க்குள் 100 பேருக்கு 15 பேர் வரை இணைப்பு பெரும் அளவிற்குதிட்டமிடப்பட்டுள்ளது.

லோக் ஜனசக்தி தொடக்க விழா: தமிழகத்தில் தனது கட்சியின் துவக்கவிழா மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ள மத்திய அமைச்சரும்லோக் ஜனசக்தி நிறுவனத் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் :

பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள கட்சியின் கிளைகள் இந்த ஆண்டிற்குள் மேலும்பல மாநிலங்களில் தொடங்கப்படும்.

ஐக்கிய ஜனதா தளத்தின் கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களும்,தலைவர்களும் லோக்ஜனசக்தியில் இணைந்து வருவதால் 2002க்கு பின் ஐக்கியஜனதாதளம் என்று ஒரு கட்சி இருக்காது.

தமிழகத்தில் தற்போதுதான் கட்சியின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சியின் மாநில கிளைமுடிவு செய்யும்.

சமூக நீதி, மதசார்பின்மையை முன்னிறுத்தி உருவாகியுள்ள தேசீய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இக்கொள்கைக்கு எதிராக கருத்துதெரிவித்தால் அது அவர்களது சொந்த கருத்துதானே தவிர கூட்டணியின் கருத்து அல்ல என நிருபர்களிடம் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X