புதுவையில் காங்கிரஸ்தான் நம்பர் ஒன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ்தான் முதலிடத்தில் இருக்கும். யாருக்காகவும் அந்த இடத்தை விட்டுத் தர மாட்டோம் என பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர்நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் பேசிய அவர், புதுவை பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான பிரணாப் முகர்ஜி,குலாம் நபி ஆஸாத் ஆகியோரை சந்தித்தது.
பாண்டிச்சேரி நிலவரம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்து காங்கிரஸ் தான் இப்பிரதேசத்தில் முன்னிலையில் இருக்க வேண்டும் என அவர்களிடம்வலியுறுத்தப்பட்டுள்ளது.
த.மா.கா.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதால் மூப்பனாரை ஞாயிறன்று மாலை சந்தித்துபேசவுள்ளோம். புதுவை முதல்வரும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் மற்றும் த.மா.கா கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணி அல்லது மூன்றாவது அணி பற்றி அதிகம் சிந்தித்து வருகிறது.விரைவில் புதுவைகாங்கிரஸிற்கோ, கூட்டணியின் மற்ற கட்சிகளுக்கோ பாதிப்பு வராத வகையில் முடிவெடுக்கப்படும்.
தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையில், புதுவை காங்கிரஸ் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. காங்கிரஸ் சீட் பெற 2000 ரூபாய் கட்டிவிண்ணப்பிக்க வேண்டும். இத்தொகை ரிசர்வ் தொகுதிக்கு 1000 ரூபாயாக இருக்கும்.
புதுவை மதசார்பற்ற கூட்டணியை உடைக்க யார் முயற்சித்தாலும் அதனை கூட்டணி முறியடிக்கும். மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளபா.ம.க.வை தடை செய்ய காங்கிரஸ் கோரியிருந்தது. காங்கிரஸின் ஆதரவை பெற பா.ம.க.தலைவர் ராமதாஸ் முதலில், பா.ம.க.விற்கும் புலிகளுக்கும்தொடர்பில்லை என அறிவிக்க வேண்டும் எனக் கூறினார்.
யு.என்.ஐ.