For Daily Alerts
Just In
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்டது ரஷ்யா
மாஸ்கோ:
ரஷ்ய-ஜியார்ஜியா மலைப்பாதையில் சிக்கியிருந்த 150 பேரை ரஷ்ய மீட்புக்குழு மீட்டது என சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய காகஸஸ் பகுதிஅமைச்சரான போரிஸ் ஸோகோயேவ் தெரிவித்தார்.
ரஷ்ய-ஜியார்ஜியா எல்லையில் உள்ள குகை பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டதில் சிக்கிக் கொண்ட 1000 பேரை ரஷிய மீட்புப்படை கடந்த வாரம்மீட்டது.
அதில் சிக்கிய 150 பேரை மீட்பதில் சீதோஷ்ண நிலை காரணமாக தாமதம் ஏற்பட்டு வந்தது. அவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகசெய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
குகைப் பாதையில் உள்ள பனிச்சரிவை தடுக்க குகைப் பாதையில் உள்ள பனிப்படிவுகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அங்கு நிலவும் பனிப்பொழிவு ,பனிப்புகை காரணமாக அப்பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஸோகோயேவ் தெரிவித்தார்.
Comments
Story first published: Sunday, February 25, 2001, 5:30 [IST]