நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் ஆய்வறிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடாளுமன்றத்தில்ம மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த பட்ஜெட்டின் உள்ள பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அவைகள் குறித்த விவரம் வருமாறு:

கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை 5.0 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை அதிகரித்தால் நாட்டின்பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிப்படையும்.

மாநில நிதித்துறையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

1998-1999 ம் ஆண்டு 6.6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 1999 - 2000 மாவது ஆண்டு 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

1998-99 ம் ஆண்டு 0.7 சதவீதமாக இருந்த விவசாயத்துறை வளர்ச்சி 1999-2000 மாவது ஆண்டு 0.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. உற்பத்திப்பொருட்களின் விலை தொடர்ந்து 3 சதவீதமாகவே இருந்தது. எண்ணெய் உற்பத்தி 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வரி குறைப்பு காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசுத்துறை மாற்றப்பட்டு தனியாரிடம் பங்குகளாக விற்கப்பட்டன.பெட்ரோலியம் மற்றும் நிலக்கரித்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டன.

தவறான முறைகளில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த கல்வி நிலையங்கள் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டது. மாநில மின்வாரியத்துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அரசுத்துறை மற்றும் அமைச்சரவையிலிருந்து தேவையில்லாத பதவிகள் நீக்கப்பட்டன. தொழில் போட்டியை எதிர்கொள்வதற்காக தொழிலாளர்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

உரம், பெட்ரோலியம் மற்றும் நிலக்கரித் தொழில்களில் மானியங்கள் சீர்படுத்தப்பட்டன.

மேற்கண்டவைகள் அனைத்தும் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஆய்வறிக்கையாகும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+