சீனாவில் நிலநடுக்கம்: 20,000 பேர் வீடுகள் இழப்பு

Subscribe to Oneindia Tamil

பீஜிங்:

சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து தங்களது உடைமைகளை இழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பசியாலும், குளிராலும், நோய்வாய்ப்பட்டநிலையிலும் தவித்து வருகின்றனர்.

சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை 6.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 109 பேர்காயமடைந்தனர். 49, 000 பேர் உடைமைகளை இழந்தனர். இவர்களில் 20, 000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

நிலநடுக்கத்தால் வீடுகள், உடைமைகளை இழந்தவர்கள் தெருக்களில் படுத்து உறங்குகிறார்கள். மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்நோய்வாய்ப்பட்டோ அல்லது கடுங்குளிர் தாங்காமலோ உயிரிழக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது சீன அரசு.

சீனா மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு வாழும் பெரும்பாலான மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுவரை நிலநடுக்கத்தால் யாரும் உயிரிழக்கவில்லை. சீனாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மின்சாரம், குடிநீர் விநியோகம், சாலைகள்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. 200 மில்லியன் யான் பெறுமானமுள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.

முன்னதாக, சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.09 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+