மாலத்தீவு சிறையிலிருந்து 8 மீனவர்கள் விடுதலை
சென்னை:
மாலத்தீவில் கடந்த நவம்பர் மாதம் 12 ம் தேதி முதல் சிறை வைக்கப்பட்டிருந்த 8 தமிழக மீனவர்கள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெனிபர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் விழுஞ்ஞசம் துறைமுகம் அருகிலுள்ள கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களை மாலத்தீவு கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றனர். இதையடுத்து அவர்கள் மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களைவிடுவிக்க தமிழக அரசு கடும் முயற்சி செய்தது. இறுதியில் சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க மாலத்தீவு அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட அவர்கள் திங்கள்கிழமை திருவனந்தபுரத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications