For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளக் காதல் .. மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவர்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ராஜபாளையம் அருகே கள்ளக் காதலில் ஈடுபட்ட மனைவியை கொடூரமாக வெட்டிக் கொ லை செய்தார் கணவர்.

ராஜபா ளையம் அருகே உள்ள கீழராஜன் குளம் பகுதியில் உள்ளது வி.புதூர்கிராமம். அந்தக் கிராமத் தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(36). இவரது மனைவி ஜோதி (27).

ஜோதிக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த இ ளைஞர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகமாரிமுத்துவுக்கும், ஜோதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந் நிலையில், திங்கள்கிழமை இரவும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றவே, வீட்டில் இருந்தஅரிவாளை எடுத்து, ஜோதியை கொடூரமாக வெட்டினார் மாரிமுத்து. அவரது இரு மார்பகங்களையும் தனியாக வெட்டி வீசினார்.

அதன் பின் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். தகவல் அறிந்த கீழராஜன் குளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். தப்பியோடிய மாரிமுத்துவை போலீஸார் தேடி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X