For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் தனித்துப் போட்டியிட கவுண்டர் பேரவை முடிவு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவைமற்றும் தமிழ் தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

கோவையில் ந டந்த தமிழ் தேசியக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அதிகமாக வாழும், ஈரோடு, கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்கள்உள்பட பல்வேறு மாவட்டங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம். தேர்தலில் தனித்துபோட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ் தேசியக் கட்சி தனது பலத்தை நிரூபிக்கும். வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்துத்தொகுதிகளிலும் தேர்தல் மாநாடு நடத்தப்படும்.

தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதிகளிலும் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவசமின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது.

கொப்பரைத் தேங்காய்க்குப் பதிலாக தேங்காயை நேரடியாக விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யவேண்டும். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X