Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்தைக் கடையில் கரடி வித்தை

Subscribe to Oneindia Tamil

கோவை:

சந்தைக் கடையில் கரடி வித்தை காட்டி பணம் வசூலித்த வரை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற் கொண்டுவிசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள தடாகம் கிராமத்தில் வார வாரம் சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் ஒவ்வொருவாரம் இதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் கரடியை வைத்து வித்தை காட்டி சம்பாதித்து வந்தார்.இந்த வித்தைக்கும், கரடிமுடி மற்றும் தாயத்து ஆகியவை விற்று வந்தார்.

இதையறிந்த வனத்துறையினர் தடாகத்திற்கு வந்து அண்ணாதுரையைப் பிடித்தனர். அண்ணாதுரையிடம், தாயத்து,கரடி முடி விற்ற பணத்தையும் கைப்பற்றினர். மேலும் அவரிடமிருந்த 3 வயது பெண் கரடியையும் பிடித்தனர்.

இது குறித்து அண்ணாதுரையிடம் அவர்கள் செய்த விசாரணையில், இந்த தாயத்து மற்றும் கரடி முடி விற்பனையைகாலங்கலமாக, எங்கள் பரம்பரையினர் செய்து வருகின்றனர். இந்த கரடி வித்தை மூலம் கிடைக்கும் பணத்தில்குடும்பம் நடத்தி வருகிறோம். வித்தை காண்பிக்க கர்நாடக அரசு லைசென்ஸ் வழங்கியுள்ளது என்றார்.

வனத்துறையினர் அந்த லைசென்சை உடனடியாகக் காட்டுமாறு கோரியுள்ளனர். இதன் பின்னரே அவரிடம்விசாரணை தொடரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+