கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழக மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க உறுப்பினர்களும், ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களும் திருச்சி கூட்டுறவு வங்கியின் தலைமை கிளையின்முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஒருங்கிணைப்பு குழுவின் நிறுவனர், பாலகிருஷணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிதிதருந்ததாவது:
முருகராஜ் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சம்பள விகிதங்களை திருத்தி அமைக்கும் முன் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படவேண்டும்.
மாநில அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மார்ச் மாதம் 2-ம் தேதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications