தேர்தல் குழுக் கூட்டத் தைக் கூட்டுகிறது பா.ஜ.க.
சென்னை:
தேர்தல் மற்றும் பல்வேறு பிரச்சி னைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் மாநலதேர்தல் குழுக் கூட்டம் சென் னையில், புதன்கிழமை நடக்கிறது.
தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். கட்சியின் த லைமைஅலுவலகமான கமலாலயத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. மாநில பா.ஜ.க. தலைவர் டாக்டர் கிருபாநிதிகூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். மத்திய பார்வையாளர் ராமாராவும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்
3 மணிக்கு இந்தக் கூட்டம் துவங்குகிறது. அது முடிந்தவுடன் 6 மணிக்கு வரைவு தேர்தல் அறிக் கை குறித்துவிவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பா.ஜ.க. நிதிக் குழுக் கூட்டம் நடக்கிறது. இந்தக்கூட்டங்களில் கட்சியின் து ணைத் தலைவர் வேலாயுதன் எம்.எல்.ஏ, பொதுச் செயலாளர்கள் இல. க ணேசன், எச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
பா.ஜ.க. செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications