எங்களை விடமாட்டீங்களே !
டெல்லி:
யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த அமைச்சர் நிதியமைச்சர் ஆனாலும் எங்களை விட மாட்டீங்களே என்கிறார் மும்பையைச் சேர்ந்தஓய்வூதியம் வாங்கும் முன்னாள் மத்திய அரசுப் பணியாளர் ஒருவர்.
சிறுசேமிப்பு மீதான வட்டியை அரசு குறைத்திருப்பதைத் தான் அவர் நொந்து போய் சொல்கிறார்.
என்னைப் போன்று மாத வருமானத்துக்கு அரசு அலுவலகத்திலும் தனியார் அலுவலகத்திலும் மாடாய் 25 வருடம்உழைப்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பி.எப் போன்றவற்றை சிறுசேமிப்பிலும், வங்கிகளிலும் முதலீடு செய்து வைத்து அதில்கிடைக்கும் வட்டியை வைத்துத் தான வாழந்து வருகிறோம்.
ஆனால், இந்த முதலீடுகள் மீதான வட்டியை மத்திய அரசுகள் தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகின்றன. இந்த பட்ஜெட்டில்சிறுசேமிப்பு மீதான வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
பணியில் இருக்கும்போது வருமான வரி போட்டு தீட்டுகிறார்கள். ஓய்வு பெற்று கிடைத்த பணத்தை முதலீடு செய்து வட்டியைநம்பி வாழ்ந்தால் வட்டி விகிதத்தை குறைத்து வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார்கள் என்று ஆதங்கத்தை கொட்டுகிறார்.
பட்ஜெட் வந்தாலே அடுத்த நாள் முதல் மண்ணெண்ணெய் முதல் கார் வரை விலை உயரும்... அது தானே பட்ஜெட் என்கிறார்மற்றொருவர்.
கம்ப்யூட்டர் விலையை குறைப்பது ஓ.கே. நடுத்தர, ஏழை மக்கள் அன்றாடம் வாங்கும் பொருள்களின் மீதான வரியை ஏன்குறைக்கவில்லை என்கிறார் மும்பையைச் சேர்ந்த சஞ்சய் வட்கர் என்பவர்.
ஆனால், வருமான வரியில் எந்த உயர்வும் இல்லாததும், அதில் வழங்கப்பட்டுள்ள சிறிய சலுகையும் பல மாத ஊதியக்காரர்களைமகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சர்க்கரை விலை குறைப்பு எல்லாம் சும்மா என்கிறார் தாரா என்ற டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர். வெளியிலும் ரேஷன்கடைகளிலும் ஒரே விலையில் தான் சர்க்கரை கிடைக்கிறது என்கிறார்.












Click it and Unblock the Notifications