ஒரு பஸ் தினம் .. சில கலாட்டாக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பஸ் தினம் கொண்டாடிய மாணவர்கள் வன்முறையில் இறங்கினர். இதில் சில பஸ்கள் உடைக்கப்பட்டன. க டைகள் தாக்கப்பட்டன. பொதுமக்கள்பாதிக்கப்பட்டனர்.

சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் புதன்கிழமை பஸ் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து திருவான்மியூரிலிருந்து கிளம்பும் 23 சி பஸ்ஸில்மாணவர்கள் அமர்ந்து பஸ்வலம் கிளம்பினர். பஸ்ஸின் மேல் கூரையிலும் மாணவர்கள் அமர்ந்து பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடி வந்தனர்.

நகரின் பல பகுதிகளில் பஸ் சென்ற போது சாலையில் செல்பவர்களை பார்த்து விசில் அடிப்பது, சைகை செய்வது என மாணவ சேஷ்டைகளைக் காட்டி வந்தனர்.

பஸ், எழும்பூர் மார்ஷல் சாலையில் வந்த போது மாணவர்கள் தங்களது நிலையை மறந்து, வன்முறையில் இறங்கினர். அவர்களில் ஒரு குழு சாலையில் இறங்கிஅங்கிருந்த ஒரு பேக்கரி கடையைத் தாக்கியது. மேலும் 2 கடைகளும் சூறையாடப்பட்டன. அவர்களின் கல்வீச்சு தாக்குதலில் சாலையில் வந்த பஸ்களும்தப்பவில்லை.

பின்னர் அங்கு தங்களது முத்திரையைப் பதித்து விட்டு அண்ணாசாலைக்கு அந்த மாணவர்கள் பஸ் பயணத்தைத் தொடர்ந்தனர். இவ்வளவு நடந்தும் அங்குபோலீஸார் வரவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+