டெல்லி விரைகிறார் மூப்பனார்
சென் னை:
கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதிப்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வியாழக்கிழமை டெல்லிவிரைகிறார்.
தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அதிமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாத நிலையில், பல் வேறு விதமான விவாதங்கள்,பேச்சுக்கள், ரகசிய பேச்சுக்கள், ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
மார்ச் 1-ம் தேதிக்குள் தங்களது முடிவை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மூப்பனாருக்கு ஜெயலலிதா கெடு விதித்துள்ளார். இதையடுத்துத.மா.கா. வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. இருப்பினும் இன்னும் தெளிவான முடிவுக்கு அவர்களால் வர முடியவில்லை.
இந்த நிலையில், த.மா.கா. த லைவர் மூப்பனார், வியாழக்கிழமை மாலை டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தியுடன் அவர் பேசுகிறார்.மூப்பனாரின் திடீர் டெல்லி பயணத்திற்குக் காரணமாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.
த.மா.கா.வுக்கு 30 சட்டச பைத் தொகுதிகள் ஒதுக்க ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கு மூப்பனாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் பத்து இடங்கள் மட்டுமே தர முடியும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு மாநிலகாங்கிரஸ் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் த.மா.க. தரப்பில் காங்கிரஸை சமாதனப்படுத்த முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாண்டிச் சேரியில் தாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்பதிலும் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
ஆனால் இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பிலிருந்து உறுதியான பதில் வரவில்லை. இதனால் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட் டை ஏற்றுக் கொள்வதில்தாமதம் காட்டுகிறது.
இந்தச் சூழ்நிலையில், சோனியாவைச் சந்தித்து நிலைமையை விளக்கி விரைவில் தொகுதிப் பங்கீட் டை இறுதி செய்ய மூப்பனார் முடிவு செய்துள்ளார். இதன்பொருட்டே அவர் டெல்லி செல்வதாக கூறப்படுகிறது.
டெல்லி செல்ல முடிவு செய்வதற்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்துடன் மூப்பனார் இரண்டு முறை தொலை பேசியில்பேசியுள்ளார். அப்போது கூட்டணி குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
தற்போது இரண்டாவது முறையாக சோனியாவைச் சந்திக்கச் செல்கிறார் மூப்பனார். அ னேகமாக வியாழக்கிழமையே கூட்டணி குறித்த முடிவுதெரிய வரலாம் என்கிறது சத்திய மூர்த்தி பவன் வட்டாரம்.