தொழிற்கல்லூரி விண்ணப்பங்கள் விற்பனை துவக்கம்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மருத்துவம், பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.
திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் விற்கப்பட்டு வருகின்றன. நுழைவுத் தேர்வு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ளது. அண்ணாபல்கலைக் கழகம் மற்றும் மாநிலம் முழுவதிலுள்ள தேர்வு மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விண்ணப்பங்கள்விற்கப்படுகின்றன.
திங்கள்கிழ மை மட்டும் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் 600 விண்ணப்பங்கள்விற்றுள்ளன. நீண்ட வரிசையில் நின்று மாணவர்கள் விண்ணப்பங்க ளை வாங்கிச் செல்கின்றனர்.
விண்ணப்பங்கள் மார்ச் 30 ம் தேதி வரை விற்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய க டைசித் தேதி மார்ச் 30ம் தேதி ஆகும்.விண்ணப்ப விற்பனை குறித்து நுழைவுத் தேர்வு இயக்குநர் சங்கரநாராயணன் கூறுகையில், மொத்தம் 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விற்ப னைக்குத் தயாராகஉள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மார்ச் 30-ம் தேதிக்குள் விற்கப்பட்டு விடும். ஊரகப் பகுதிகளில் 29-ம் தேதி தான் கடைசி நாளாகும்என்றார்.