1.2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம்
துபாய்:
ஹஜ் புனித யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிலிருந்து 1, 20, 000 லட்சம் இந்தியர்கள்செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியா வந்தடைந்துள்ளனர்.
சவுதி அரேபியா சென்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த 1,20,000 ஹஜ் பயணிகளில் 71, 500 பேர் மத்திய ஹஜ்கமிட்டியினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிறர் தனியார் சுற்றுலா ஏஜன்ட்டுகள் மூலம் ஹஜ் யாத்திரைசென்றுள்ளனர்.
உலகிலேயே ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் யாத்திரிகர்களில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.இந்தோனேசியாவிலிருந்து இந்த வருடம் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள 1,80,000 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதிக அளவு ஹஜ் யாத்திரிகர்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைப்பதில்இந்தோனேசியா முதலிடம் வகிக்கிறது.
ஜெட்டா நகரில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் சையத் அக்ரூதின் கூறுகையில்,இந்தியாவிலிருந்து கடைசியாக, இந்த வருடம் ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு 235 விமானங்கள் வந்துள்ளன.
ஹஜ் பயணிகளுக்கான அனைத்து வித ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாஉள்பட 17 பேர் கொண்ட ஹஜ் பயணிகள் பிப்ரவரி 25 ம் தேதி ஜெட்டா நகர் வந்தனர்.
உலகம் முழுவதிலுமிருந்து 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் சவுதி அரேபியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெக்காவிலும், மெதினாவிலும் ஹஜ் பயணிகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் சீராக நடந்துவருகின்றன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.