பிரசவிக்க வந்தார் .. பிள்ளையைப் பறி கொடுத்தார்
சென்னை:
மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படாத கர்ப்பிணிப் பெண், மருத்துவமனை வளாக கார் ஷெட்டிற்குள்பிரசவித்தார். ஆனால் குழந்தை தரையில் விழுந்து தலையில் அடிபட்டதால் பரிதாபமாக இறந்தது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. சென்னை ஆதம்பாக்கத் தைச்சேர்ந்தவர் சந்திர லேகா (25). நிறைமாத கர்ப்பிணியான இவர், பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.ஆனால் அவருக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. பிரசவ நேரம் நெருங்கிய போது அவர், மருத்துவமனைவளாகத்திலிருந்த கார் ஷெட் ஒன்றில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப் போதும் கூட அவர் உள் ளே அனுமதிக்கப்படவில்லை.இந்த நிலையில் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை தரையில் விழுந்ததால், அதன் தலையில் அடிபட்டது. பிஞ்சுசிசுவான அது அப்போதே இறந்து விட்டது.
பிரசவிக்க வந்து, பிள்ளையைப் பறி கொடுத்த சந்திர லேகா பின்னர் எழும்பூர் மகப் பேறு மருத்துவம னைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.