ஸ்பிக் வழக்கு: மார்ச் 19க்கு ஒத்தி வைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்பிக் பங்குகள் விற்பனையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மார்ச் 19ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பிக் வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், சாட்சிகளான டிட்கோஅதிகாரிகளுக்கும் புதனன்று (பிப்ரவரி 28) நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டிருந்தார்.
புதனன்று விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் வக்கீல், 2000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை படித்து விசாரணைக்குதயாராக கால அவகாசம் தேவை என கோரியதை அடுத்து வழக்கை மார்ச் 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications