சூடானிலிருந்து குழந்தைத் தொழிலாளர்கள் விடுவிப்பு
ஜெனிவா:
யூனிசெப்பின் கடும் முயற்சியால் சூடான் தீவிரவாதிகளிடம் அடிமைகளாக வாழ்ந்து வந்த 2,600 க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்விடுவிக்கப்பட்டனர் என்று யூனிசெப் தலைவர் கரோல் பெலாமி புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சூடானிலிருந்து கடும் முயற்சி செய்து 2, 600 குழந்தைத் தொழிலாளர்களை விடுவித்துள்ளோம். இவர்கள் அனைவரும் 8 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.இவர்கள் ரம்பெக் டவுனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது உறவினர்கள் எங்குள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்.
இவர்கள் அனைவரும் சூடான் மக்கள் விடுதலை படையினரிடம், அடிமைகளாக வேலை செய்து வந்தார்கள். சூடான் தீவிரவாதிகளிடம் அடிமைகளாகவாழ்க்கை நடத்தும் குழந்தைத் தொழிலாளர்களை யூனிசெப் கண்டறிந்தது. இதையடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இதுகுறித்து சூடான்தீவிரவாதிகளிடம் குழந்தைத் தொழிலாளர்களை விடுவிக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவர்கள் சூடானில் உள்ள பார் அல் காசலில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
2,600 குழந்தைத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியடைய வைக்கிறது. இருப்பினும் சூடான் தீவிரவாதிகளிடம் 3 லட்சத்துக்கும்மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் சண்டையிடுவதற்காகவும், கூலியாட்கள் வேலைக்காகவும், செக்ஸ் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறார்கள் என்பது வருத்தப்பட வைக்கிறது.
இருப்பினும் அனைத்து குழந்தைத் தொழிலாளர்களையும் விடுவிக்க யூனிசெப் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற் கொள்ளும். ஏற்கனவே 9, 000க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை சூடான் தீவிரவாதிகளிடமிருந்து யூனிசெப் விடுவித்து.
சூடானில் தங்களுக்கு தனி நாடு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 1983 ம் ஆண்டு முதல் சூடான் மக்கள் விடுதலை முன்னணி படையினர்போராடி வருகிறார்கள். விடுதலை முன்னணியில் உள்ளவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். பல்லாண்டுகளாக நடந்து வரும் இந்தச் சண்டையில் இதுவரை 2மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications