காஷ்மீர் பிரச்சனை தீர பாக்.கேட்கும் விலை
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்பட கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதி மட்டுமல்லாது கூடுதல் பகுதிகளையும்விட்டுத்தர இந்தியா முன் வர வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானில் விஜயம் மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நாடாளுமன்றகுழு,
50 ஆண்டு காலமாக போராடியதற்கு பயன் கிடைத்துள்ளது என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். எனவே,காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்பட இந்தியா அதிக பகுதிகளை விட்டுத்தர வேண்டும் என பாகிஸ்தான்விரும்புகிறது.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரை சந்தித்த போது, பல ஆண்டுகளாக அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும்பாகிஸ்தானிற்கு ஆயதங்களை விற்க தடைவிதித்தது.
அதோடு கடந்தாண்டு இந்தியாவிற்கு 5நாள் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் கிளிண்டன், பாகிஸ்தானில்சில மணிநேரம் மட்டும் தங்கியது, அமெரிக்கா பாகிஸ்தானிற்கு எதிராக செயல்படுவதாக கருத இடமளித்துள்ளது.
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கவில்லை. அங்கு நடைபெறும் தீவிரவாதநடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் காரணமில்லை.
பாகிஸ்தான்- ஆப்கன் எல்லையில் குடியிருக்கும் மக்களிடம் குடியேற்றத்துறை நடவடிக்கைகளை தீவிரபடுத்தமுடியாது.
லாகூர் பயணத்திற்குப்பின், இந்திய பிரதமர் வாஜ்பாயின் பாகிஸ்தானிற்கு எதிரான பேச்சுக்களே கார்கில்ஊடுருவலுக்கு காரணம் என தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் சத்தார், ஹூரியத்அமைப்பு தலைவர்களுக்கு பாகிஸ்தான் வர பாஸ்போர்ட் வழங்குவதில் இந்தியா தாமதம் காட்டி வருவது பற்றியும்அமெரிக்க குழுவிடம் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications