மும்பையில் பட்ஜெட் இருட்டடிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை மும்பை நகர்வாசிகள் காண முடியாதவாறு செய்துள்ளனர்.

அந்நகர கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சிலரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்புதெரிவித்து இவ்வாறு செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா கேபிள் ஆபரேட்டர்கள் சங்க பேரவையின் தலைவர் ரவிசிங் தெரிவித்துள்ளார்.

கேபிள் டி.வி. வசதி பெற்றவர்களிடம் மாத சந்தாவோடு சேர்த்து 30 ரூபாய் பொழுதுபோக்கு வரி வசூலித்துஅரசுக்கு செலுத்துமாறு மகாராஷ்டிரா மாநில அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம், திரையரங்குஉரிமையாளர்கள் பொழுதுபோக்கு வரி வசூலித்து அரசுக்கு செலுத்துவது போல் கேபிள் ஆபரேட்டர்களும்செலுத்தலாம் என்று கூறி விட்டது.

இதனையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், தங்களிடம் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கையை சரியாகதரவில்லை எனக் கூறி பல கேபிள் ஆபரேட்டர்களை கைது செய்துள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ரவி சிங், கேபிள் சந்தாவையே சிலர் சரியாக தருவதில்லை.அவர்களிடமிருந்து வரி வசூல் செய்து தருவது என்றால் ஆபரேட்டர்களின் சொந்த பணத்தை தான் கட்டவேண்டியிருக்கும்.

அரசு அமைத்த கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் அரசு தரப்பினரை கொண்ட கமிட்டி அளித்த அறிக்கைப்படி வரிவசூலிப்பை அரசே மேற்கொள்ள வேண்டும் எனக் கோரினார்.

கேபிள் ஆபரேட்டர்களின் இக்கோரிக்கையை ஏற்க மறுத்த மாநில வருவாய்த்துறை மந்திரி அசோக் சவாண்,மும்பை நகர ஆபரேட்டர்கள் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரியை அரசுக்கு செலுத்துவதில்லை.

கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடமுள்ள அனைத்து சந்தாதாரர்களின் விபரங்களை தரும் வரை போலீசாரின்நடவடிக்கை தொடரும் எனக் கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+