For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

இந்தியாவின் துருவ செயற்கைகோள் ஏவுகணை ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. இந்தாண்டு கடைசிக் காலாண்டில் ஏவப்படக் கூடும் என அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதம் புவிநிலை செயற்கோள் ஏவுகணை ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி ஏவப்பட உள்ளதால் பி.எஸ்.எல்.வி. விண்ணில் ஏவப்படுவதுதாமதாகிறது. இரண்டு ராக்கெட்டுகளும் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்திலிருந்து ஏவப்படுகின்றன.

ஜெர்மனியின் பேர்டு செயற்கைகோளையும் (பை ஸ்பெக்டோரல் இன்ஃப்ரா ரெட் டிடெக்டர், பி.ஐ.ஆர்.டி) பெல்ஜியத்தின் புரோபா செயற்கைகோளையும்பி.எஸ்.எல்.வி விண்ணில் செலுத்தவுள்ளது.

44 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட் 1200 கிலோ எடை வரையான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தவல்லது. எடை குறைவான செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் விண்ணில் ஏவுவது செலவு குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X