ஹரியானா, கேரளாவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தலைநகர் டெல்லியிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிவானியில் (ஹரியானா மாநிலம்) புதன்கிழமை காலை 8.12 மணிக்கு நிலநடுக்கம்ஏற்பட்டது.
இதுகுறித்து பூகம்பவியல்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், புதன்கிழமை காலை 8.12 மணிக்கு 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்தவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட ஆரம்பித்தார்கள் என்றார்.
முன்னதாக, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்ச்சேதம் குறித்தத் தகவல்கள் எதுவும் இல்லை. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றுதெரிகிறது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கொல்லத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஜன்னல் கதவுகள் உடைந்து நொறுங்கின.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications