ஸ்பிக் பங்கு ஊழல் .. மீண்டும் விசாரணை துவக்கம்
சென்னை:
ஸ்பிக் நிறுவன பங்கு ஊழல் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் புதன்கிழமை முதல் தொடங்குகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்பிக் நிறுவன அதிபர் ஏ.சி. முத்தையா, ஐ. ஏ.எஸ். அதிகாரி ராமச்சந்திரன்ஆகியோர் மீது ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்றது தொடர்பான முறைகேடு குறித்து தனி நீதிமன்றத்தில் ஊழல்வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக் கை முதலாவது தனி நீதிபதிஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 28-ம் தேதி வரைதள்ளி வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து அரசுத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதில், வழக்கை தனி நீதிமன்றம்தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் நகல் தனி நீதிபதிஆறுமுகப் பெருமாள் ஆதித்தனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டமூன்று பேரும், சாட்சி விசாரணைக்கு தயாராக இருக்குமாறு நீதிபதி அவர்களது வக்கீல்களிடம் கூறினார்.
இதையடுத்து புதன்கிழமை முதல் இந்த வழக்கு மீண்டும் உயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications