மாணவர்களின் தீரம் ..45 வயது நபர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பொது மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சென்னை மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த மர்ம நபரை மாணவர்கள் அடித்து உ தைத்தனர்.இதில் அவர் படுகாயமடைந்தார்.
மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் புதன்கிழமை 45 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென நுழைந்தார். அவ ரைப் பார்த்த மாணவர்கள் திருடனாக இருக்குமோஎன்று பயந்து அவரை கட்டி வைத்தனர். பின்னர் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த நபர் படு காயம டைந்தார். இருந்தும் கட்டை அறுத்துக் கொண்டுஅங்கிருந்து தப்பினார்.
இருப்பினும் மாணவர்கள் விடவில்லை. தொடர்ந்து விரட்டிச் சென்று அவரை அடித்து உதைத்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்துபோலீஸார் வி ரைந்து வந்து அந்த நப ரை மாணவர்களிடமிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த நபர் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications