For Daily Alerts
Just In
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மதுரையில் தற்கொலை
மதுரை:
கொல்கத்தாவிலிருந்து மதுரைக்கு வந்து ஹோட்டலில் தங்கியிருந்த 45 வயது நபர் ஹோட்டல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
இதுகுறித்து மதுரை போலீஸார் கூறுகையில், கொல்கத்தாவிலிருந்து வந்து மதுரை ஹோட்டலில் தங்கியிருந்தவர் வாசுதேவன். வயது 45. அவர் 26,பார்க் ரோடு, கொல்கத்தா 18 என்ற முகவரியைக் கொடுத்துத்திருந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை. தற்கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்என்றனர்.
முன்னதாக, வாசுதேவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, February 28, 2001, 5:30 [IST]