சென்னையில் கத்திமுனையில் நகை திருட்டு
சென் னை:
சென்னை வேளச் சேரி பகுதியில் மரக் க டை உரிமையாளர் வீட்டில் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்க ளைமிரட்டி 30 பவுன் நகை மற்றும் 3000 பணத் தைத் திருடிச் சென்றது.
வேளச்சேரி சசி நகரில் மரக் க டை வைத்திருப்பவர் மோகன் பாபு. அப்பகுதியிலேயே குடியிருக்கிறார்.செவ்வாய்க்கிழ மை இரவு வீட்டிலிருந்து 7 மணியளவில் அவர் க டைக்குச் சென்று விட்டார். வீட்டில் மோகன்பாபுவின் மனைவி, அவரது அண்ணன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இருந்தனர்.
மோகன் பாபு சென்ற சில நிமிஷங்களில் சிலர் அங்கு வந்து வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டிலிருந்த மூன்று பேரையும்கத்தி முனையில் மிரட்டி பீரோ சாவிகளைக் கொடுக்குமாறு மிரட்டினர். அவர்களும் பயந்து போய் சாவிகளைக்கொடுத்தனர். பின்னர், பீரோவைத் திறந்த அக்கும்பல் அங்கிருந்த பல தஸ்தா வேஜூக ளை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் இரண்டு பெண்களின் கையிலிருந்த மோதிரத் தையும் பறித்துக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து வேளச்சேரி போலீஸில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் 30 பவுன் நகை மற்றும் ரூ. 3000 பணம்,சில தஸ்தா வேஜூகள் திருடப்பட்டதாக தெரிய வந்தது. தஸ்தாவேஜூகள் திருடப்பட்டுள்ளதால், தொழில்போட்டியில் இந்தக் கொள்ளை நடந்திருக்கலாம் என்று போலீஸ் சந் தேகிக்கிறது.












Click it and Unblock the Notifications