62 தொகுதிகள் கேட்போம் .. பா.ஜ.க.
சென்னை:
62 சட்டச பைத் தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளது. எனவே திமுக கூட்டணியில் எங்களுக்கு 62தொகுதிகளை ஒதுக்குமாறு கோருவோம் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் கிருபாநிதிகூறியுள்ளார்.
தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் பணிக் குழுக் கூட்டம், புதன்கிழமை மாலை சென் னை பா.ஜ.க.தலைமை அலுலகமான கமலாலயத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்துவிவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் மேலிடப் பார் வையாளர் ராமாராவும் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்க ளைச் சந்தித்த பா.ஜ.க. த லைவர் டாக்டர் கிருபாநிதி கூறு கையில், தொகுதிப்பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம்.
எங்களது கட்சிக்கு 62 இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே இந்த இடங்களைக் கேட்டுப்பெறு வோம். க லைஞர் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் பாரதீய ஜனதா நன்கு வளர்ந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க. வுக்கு நல்ல எழுச்சிகரமானவரவேற்பு உள்ளது என்றார்.
பேட்டியின் போது, ராமாராவ், பொதுச் செயலாளர் இல. க ணேசன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்ஆகியோரும் இருந்தனர்.