கோவையில் கோனியம்மன் கோவில் தேரோட்டம்
கோவை:
கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இதனை கலெக்டர் வடம்பிடித்துத் துவக்கி வைத்தார்.தேரில் சிக்கிய போலீஸ்காரருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.
கோவையில் கோனியம்மன் கோயில் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. பெரியகடைவீதியில் உள்ள இந்தக்கோயிலில் ஆண்டு தோறும் இந்த தேரோட்டம் நடக்கும். குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பின் இந்தக் கோயில்தேரோட்டம் நடத்த பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.
கோவை கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. இந்த விழாவில் பிப்ரவரி 27ம்தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதன் பின்னர் 28ம் தேதி நடந்த தேரோட்டத்தில் பேரூர் ஆதீனம்,மாவட்ட கலெக்டர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்துத் துவக்கி வைத்தார்.தேரோட்டத்தின் போது பழம் மற்றும் உப்பை தேரின் மீது போட்டனர்.
கோனியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை மாலையில் நடந்தது. இந்த தேரோட்டத்தின்போதுகருப்பணகவுண்டர் வீதியில் தேர் சென்றது. அப்போது தேர், அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த சப்இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணியின் காலில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications