டெல்லியில் புதிய பாதுகாப்பு நடவடிக்கை
டெல்லி:
தலைநகர் டெல்லியிலுள்ள முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினரால் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்தியதை அடுத்து, நாட்டின் அதிகார மையங்களான நார்த் பிளாக் மற்றும்சவுத் பிளாக் உள்ளிட்ட 45 கட்டிடங்களை சி.ஐ.எஸ்.எப் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இன்னும் 29 கட்டிடங்களை விரைவில் தனதுகட்டுப்பாட்டில் சி.ஐ.எஸ்.எப் எடுத்துக்கொள்ள உள்ளது.
முன்னதாக, 1999ம் ஆண்டு நடந்த காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள 20 விமான நிலையங்களின் பாதுகாப்பு இப்படையின்கட்டுப்பாட்டில் உள்ளன. விரைவில் அனைத்து விமான நிலையங்களும் இவற்றின் கட்டுப்பாட்டில் வரும்.
பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை அளித்து வரும் இந்த அமைப்பு விரைவில் தனியார் நிறுவனங்களுக்கும் தனதுசேவையை விரிவு படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக டெல்லியில் நடந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆண்டுவிழாவில் பேசும்போது அதன் தலைவர் பி.பி.நந்தா தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications