கொலை வழக்கு: வாலிபருக்கு கடுங்காவல்
கோவை:
சமையல் செய்யும்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த நண்பருக்கு 5 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் பஞ்சாலை ஒன்றில் இரு நண்பர்கள் பணியாற்றி வந்தனர். முத்துராஜ்(25), தங்கவேல் (24), ஆகிய இருவரும் நண்பர்கள். இங்கு ஒரு அறை எடுத்து அதில் தங்கியிருந்தனர். அப்போதுஇருவரும் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
இந்த ஒப்பந்தப்படி, ஒரு நாள் விட்டு ஒருநாள் மாறி மாறி சமையல் செய்து கொள்வது என முடிவு செய்தனர். இதில்இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறில் முத்துராஜை, தங்கவேல் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கவேலைக் கைது செய்தனர். கோவை இரண்டாவதுகூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், தங்கவேலுவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைவிதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications