பஹ்ரைன் வங்கியில் இந்தியர் நிதி மோசடி
துபை:
பணியாளர்களுக்கு சம்பளம் தராததோடு பஹ்ரைன் வங்கிகளில் பெற்ற கடனையும் அடைக்காமல் இந்திய நகை வியாபாரி ஒருவர் தப்பியோடி விட்டார்.
இந்திய நகை வியாபாரியான சுரேஷ் பகவான்ஜி என்பவருக்கு சொந்தமானது பகவான்ஜி ஜூவல்லரி.
40 வருடங்களாக இயங்கி வரும் அக்கடையில் இந்தியாவிலிருந்து சென்ற பணியாளர்கள் உள்பட 60 பேர் பணியாற்றி வந்தனர்.
பகவான்ஜி, கடந்த சில மாதமாக அவர்களுக்குரிய மாத சம்பளத்தை வழங்கவில்லை. தனது தந்தை ஆரம்பித்த இந்நிறுவனத்தின் பெயரில் பகவான்ஜிபஹ்ரைன் வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். அதனை திருப்பி செலுத்தாத நிலையில் கடந்த மாத இறுதியில் பகவான்ஜி பஹ்ரைனை விட்டு வெளியேறி விட்டார்.
இதனால், பாதிக்கப்பட்ட பணியாளர்களில் 12 பேர் இந்தியா திரும்பி விட்டனர். மீதியுள்ளவர்கள் இந்திய சமுதாய மீட்பு நிதியமைப்பின் பராமரிப்பில் உள்ளனர்என பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications