திருச்சி, சேலம் செல்கிறார் கருணாநிதி
சென் னை:
தமிழக முதல்வர் கருணாநிதி திருச்சி மற்றும் சேலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சன் டிவி சார்பில் வசூலிக்கப்பட்ட குஜராத் பூகம்பநிவாரண நிதியை முதல்வர் பெற்றுக் கொள்கிறார்.
3-ம் தேதி திருச்சி செல்கிறார். அங்கு திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மாலை 4.30 மணிக்குரத்னவேல் தேவர் மன்றத்தைத் திறந்து வைக்கிறார். 5 மணிக்கு மகளிர் சுயசே வை உதவிக் குழுக்களின் மாநாட்டைத் துவக்கிவைக்கிறார்.
4-ம் தேதி கா லை 9.30 மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியின் நூற்றாண்டு விழாக் கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார். 11மணிக்கு பெரியார் பல்கலைக்கழக கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications