மதுரை திமுக வில் குழப்பம்
மதுரை:
மதுரை தி.மு.க. கவுன்சிலர்கள் குழப்பத்தின் உச்சியில் உள்ளனர்.
தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் ஒரு மகன் சென்னை மேயராக ஆட்சி புரிகிறார். மதுரை மகனான மு.க. அழகிரிஅதிகாரபூர்வமற்ற மேயராக மதுரையை ஆண்டு கொண்டிருக்கிறார்.
அழகிரியின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அவருடைய ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியை விட்டு தி.மு.க. தலைமை நீக்கியது.
உடனே, அழகிரியின் ஆதரவால் கவுன்சிலரானவர்களில் 7 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக செவ்வாயன்று தங்களது கவுன்சிலர் பதவியைராஜினாமா செய்தனர்.
ஆனால், அவர்களில் 5 பேர் தங்களது ராஜினாமாவை வாபஸ் வாங்கியதோடு மீண்டும் தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அழகிரிக்கு ஆதரவாக தொடர்ந்து இருப்பவர்கள் மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தின் தலைவரான முனியாண்டியும், 48 வது வார்டுமாநகராட்சி கவுன்சிலரான அப்துல் காதரும் தான்.
இவர்களுக்கு துணையாக வந்திருப்பவர் சுலைமான் பீவி என்ற கவுன்சிலரும் ராஜினாமா செய்துள்ளார். திமுக தலைமைக்கும், மதுரை மாநகராட்சியின்மேயர் மற்றும் கமிஷனருக்கு அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில், ஆளுங்கட்சி உறுப்பினரான தான் கோரியபடி தொகுதிக்கு வேண்டிய வசதிகளை செய்து தரமாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டதால் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
இவரது ராஜினாமாவை அடுத்து 72 உறுப்பினர்களை கொண்ட மதுரை மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 26 ஆக குறைந்துள்ளது.
யு.என்.ஐ.