ஆதரவும், எதிர்ப்பும்
கொழும்பு:
புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு பல்வேறு வகையில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை பத்திரிகைகள் அனைத்தும் இதனை வரவேற்றுள்ளன. இங்கிலாந்தில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளதால் நார்வே குழுவின் அமைதிமுயற்சி பாதிக்கப்படும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
இதே கருத்தையே புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கமும் தெரிவித்திருந்தார். எனினும், புலிகள் அமைப்பு தொடர்ந்து பேச்சு வார்த்தைக்குமுயற்சி செய்யும் என தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பை தடைசெய்ய வேண்டும் எனக் கோரி போராட்டங்களை நடத்தி வந்த புத்த அமைப்புகள் பல பிரிட்டனின் இந்த அறிவிப்பைவரவேற்றுள்ளன.
இலங்கை அரசு, நீண்ட காலமாக புலிகள் அமைப்பை தடை செய்ய இங்கிலாந்திடம் கோரி வந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த முடிவால்இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, பிரிட்டனின் நடவடிக்கையைவரவேற்கும் அறிக்கை ஒன்று இலங்கை அரசின் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.