பெண் மீது தாக்குதல்: போலீசை எதிர்த்துப் போராட்டம்
சென்னை:
திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்ட தலித் வாலிபரின்மனைவியை அடித்து துன்புறுத்திய போலீசாார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்தும்போராட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை இரவு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
தன் கணவர் போலீஸ் நிலையத்தில் வைத்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்துப் புகார் கொடுக்கச்சென்ற தலித் பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கைஎடுக்காமல் தாமதித்து வருகிறது திமுக அரசு.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியினர் மார்ச் 2 ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர். இதில் அதிமுக வும் கலந்துகொள்ளும். மேலும் இவ்விஷயம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications