For Daily Alerts
Just In
மாணவரை அடித்த ஆசிரியர் கொலை
காஞ்சிபுரம்:
மாணவரை அடித்த ஆசிரியர் கட்டையால் தாக்கி கொல்லப்பட்டார்.
காஞ்சிபுரத்திற்கு அருகில் நரவக்குப்பம் பகுதியில் 10 ம் வகுப்பு மாணவரைக், கிருஷ்ணன் என்ற ஆசிரியர் அடித்து விட்டார்.
மாணவரின் தந்தை இது பற்றி அறிந்தவுடன் தனது உறவினர்கள் சிலருடன் சென்னை-நரவக்குப்பம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆசிரியரை வழிமறித்து தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர் உயிரிழந்தார். சம்பவம் நடந்த போது ஆசிரியரின் மகளும், மருமகனும் உடனிருந்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீஸார், ஆசிரியரை தாக்கிய மூவரையும் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, March 1, 2001, 5:30 [IST]