For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாநகராட்சி நிலத்தை சுருட்டினார் அமைச்சரின் அண்ணன்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தனது சகோதரர் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்கிறார் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், த.மா.கா.வைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி உறுப்பினரான வெற்றிவேல் கூறியுள்ள குற்றச்சாட்டுஆதாரமற்றது.

அவர் குறிப்பிட்டுள்ள இடத்தை கடந்த 30 வருடங்களாக விளம்பர நிறுவனம் நடத்தி வரும் எனது சகோதரர், 1989 லேயே யுனைடெட் பிரீவரீஸ்நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளார்.

இது பற்றி அறிந்திருந்தும் இப்பிரச்சனையை மாநகராட்சிக் கூட்டத்தில் எழுப்பாமல் இருக்க தன்னை தனிப்பட்ட முறையில் கவனிக்க வேண்டும் எனஎனது சகோதரரிடம் கூறியிருக்கிறார் வெற்றிவேல்

மாநகராட்சி கூட்டத்தில் இப்பிரச்சனை குறித்து தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறும் வெற்றிவேல் கடந்த 6 மாதத்திற்கு முன்புமாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உண்மை நிலையை விளக்க வேண்டும் என கோரி மாநகராட்சி கமிஷனரும் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதனிடையே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய வெற்றிவேல் அடுத்த 48 மணிநேரத்திற்குள் அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளாவிட்டால்அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவரது குற்றச்சாட்டுகளை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள், இதனை வெளியிட்ட இரு ஆங்கில நாளேடுகள் போன்றவற்றிற்கும்இது போன்ற நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X