பொறியியல் கல்லூரி தொடங்குகிறது ஒய்.எம்.சி.ஏ.
சென்னை:
கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் ஒய்.எம்.சி.ஏ.(கிறிஸ்தவ இளைஞர் சங்கம்) அமைப்பு, சென்னையில் பொறியியல் கல்லூரி ஒன்றைறுவ உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஒய்.எம்.சி.ஏ. தலைவர் ஜே.ஸி.டி.பிரபாகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவலில்,
ஆசியாவிலேயே அதிக அளவில் உறுப்பினர்களை (15000 பேர்) கொண்ட சென்னை ஒய்.எம்.சி.ஏ. அமைப்பு அமைக்கப்பட்டு 110 ஆண்டுகளாகிறது.
ஏழைக்குழந்தைகள் கல்வியறிவு பெறுவதற்காக பொறியியல் கல்லூரி தவிர, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி மையம், கம்ப்யூட்டர் அகாடமிஆகியவற்றைத் தொடங்க உள்ளது.
கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.விற்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் இவை அமைக்கப்பட உள்ளன.
கல்விப்பணி தவிர, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்காக, சென்னை ராயப்பேட்டையில், சர்வதேச இளைஞர் மையம் ஒன்றை 20 கோடி ரூபாய்செலவில் அமைக்க உள்ளது.
உள்ளரங்கு விளையாட்டு மைதானம், நீச்சல்குளம் மற்றும் 1000 பேர் அமரக்கூடிய வகையிலான காட்சி அரங்கு உள்ளிட்டவை இந்த மையத்தில்அமைக்கப்படும்.
கீழ்ப்பாக்கம் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் 10 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேட்மின்டன் அரங்கம் ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications