சென்னை கிரிக்கெட்: மார்ச் 19ம் தேதி அரசு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு மார்ச் 19ம் தேதி விடுமுறை அளித்துள்ளதுதமிழக அரசு.
வெள்ளிக்கிழமையன்று சென்னையில் வெளியிடப்பட்ட அரசின் செய்தி குறிப்பில் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 18ம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை காணுவதற்கு வசதியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்குஇந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக மார்ச் 31ம் தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்.
மின்வாரிய அலுவலகங்கள் மே மாதம் 12ம் தேதியை வேலை நாளாக அனுசரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் தடைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும்இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications