இஸ்ரேல் வீரர்கள் தாக்கியதில் 4 பாலஸ்தீனியர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்:

மேற்குக் கடற்கரை மற்றும் காசாவில் நடந்த சண்டையில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பாலஸ்தீன மருத்து மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராமல்லா அருகே உள்ள அல் ப்ரீச்சில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கிடையே சனிக்கிழமை காலை கடும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் 9 வயது சிறுவன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவர் பெயர் ஓபாய் தார்ராஜ். இவர், இருதரப்பினருக்கும் இடையேமோதல் நடந்த போது இவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை ராமல்லாவில் தொழுகை நடந்த பின் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், அங்கிருந்த பாலஸ்தீனர்களை நோக்கித் துப்பாக்கியால்சுட்டனர். இதில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் குறித்து, பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் முதல்மோதல் நடந்து வருகிறது. மோதலில் இரு தரப்பையும் சேர்த்து நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+